தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று திருச்சி அருண் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது மாநில தலைவர் மணி நந்தன் தலைமை தாங்கினார். மாநில தலைமை பொதுச் செயலாளர் லட்சுமணன், பாராளுமன்ற குழு தலைவர் ராஜகோபால், மாநில பொருளாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாநில மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் வரவேற்றார் கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர்கள் முருகப்பன், பார்த்திபன், லயன் டாக்டர் ஏ டி விஸ்வநாத், ராமமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;- 2026 சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி வாய்ப்புள்ள பெரும்பாலான தொகுதிகளை தேர்ந்தெடுத்து போட்டியிடுவது என தீர்மானிக்கப்படுகிறது.இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். பீகாரில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் முதன் முதலில் அமல்படுத்திய சாதிவாரி கணக்கெடுப்பை போல தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். மேலும் கட்சியின் மாநில நிர்வாகிகள் அணி தலைவர்கள் மாவட்ட தலைவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர் முடிவில் திருச்சி மாவட்ட தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.