தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் மத்திய மாநில அரசை கண்டித்து தலையில் முக்காடு போட்டு கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தியும், விவசாய விளைபொருட்களுக்கான லாபகரமான விலை வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்க வேண்டும், தரமான நெல் விதைகளை, உரங்களை வழங்கிட வேண்டும்.

விவசாய மின்சாரத் திட்டத்திற்கு ஸ்மார்ட் மீட்டர் பொதுத்துவாதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய மாநில அரசை கண்டித்து கையில் திருவோடு ஏந்தி தெருவில் பிச்சையெடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் தலையில் முக்காடு அணிந்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்