உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் திருச்சி மாவட்ட கிழக்கு தொகுதி சார்பில் சங்கிலியாண்டபுரம் பகுதியில் மண்டல தலைவர் செந்தில் தலைமையில் பொதுமக்களுக்கு குஸ்கா, முட்டை, சிக்கன் கிரேவி, தால்சா உள்ளிட்டவை அன்னதானமாக வழங்கப்பட்டது. முன்னதாக இந்த கோடை காலத்தில் வெயிலுக்கு இதமாக பொதுமக்களுக்கு தண்ணீர் மோர் ஆகியவை வழங்கப்பட்டது மேலும் இன்று நடைபெற்ற அன்னதானத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அன்னதானம் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழக திருச்சி மண்டல தலைவர் செந்தில் கூறும் போது:- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆணைக்கிணங்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின்படி 500க்கும் மேற்பட்டோருக்கு இன்று அன்னதானம் வழங்கினோம். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் மாநாடு நடத்துவதற்கான மாவட்டம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது அரசியலில் திருப்புமுனையாக இருக்கக்கூடிய திருச்சி மாவட்டத்தில் மாநாடு நடத்துவதற்கான கோரிக்கையை திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் வைத்துள்ளோம். திருச்சியில் மாநாடு நடந்தால் அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்வோம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்