சட்ட மாமேதை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களின் 67-வது நினைவு தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான கருப்பு முருகானந்தம் தலைமையில் அம்பேத்காரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் இராஜசேகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பேட்டி.. டாக்டர் அம்பேத்காரின் புகழையும் அவர் இந்த தேசத்திற்காக ஆற்றிய பங்களிப்பையும் பாரதிய ஜனதா கட்சி உலகம் முழுவதும் எடுத்துச் சென்று அவருடைய புகழை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது தொடர்ந்து அச்செயலை செய்வோம் என்றார்.  சென்னை முழுவதும் வெள்ளை காடாக காட்சியளிக்கிறது. மக்கள் அனைவரும் வீட்டின் மாடியில் நின்று கொண்டு உணவிற்கும் தண்ணீருக்கும் கையேந்தும் நிலை இன்று உருவாகியுள்ளது.தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், தனது பாதயாத்திரை ரத்து செய்துவிட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிக் கொண்டிருக்கிறார். அதேபோல் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண பணிகளை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டு காலமாக ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் ஆட்சியின் லட்சணத்தை தற்போது நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்தாலும் புயல் வந்தாலும், மழை வந்தாலும், இதே நிலைமைதான் நீடித்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த ஆட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதற்கு ஒரு விடிவு காலம் ஏற்படவில்லை. மேலும் ஆட்சிக்கு வந்தவுடன் என்ன திட்டங்கள் செயல்படுத்தலாம் அதில் எவ்வளவு கமிஷன் அடிக்கலாம் என்ற எண்ணங்களில் மட்டுமே ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற பாதிப்பு ஏற்பட்டு கொண்டிருக்கும்போது ஆட்சியில் இருப்பவர்கள் இதற்கான ஒரு தீர்வை இதுவரை யாரும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார். ஆகையால் 2026 ஆண்டு பாஜக ஆட்சி நடைபெறும் போது இது போன்ற நிலைமை சென்னையில் நிகழாது.

தமிழ்நாடு அரசு 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கான எந்த பணியும் நடந்ததாக தெரியவில்லை. ஆகையால் தமிழ்நாடு அரசு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து என்னென்ன திட்ட பணிகள் நடைபெற்றது, அதற்கு எவ்வளவு நிதிகள் செலவிடப்பட்டது . முழுமையாக திட்டங்கள் முடிக்கப்பட்டதா என்பதை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கும் தெரியவரும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *