தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் இணைப்பு சங்கமான ஏ ஐ யூ சி திருச்சி மாவட்டம் சார்பில் மண்டல சிறப்பு மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசன் மஹாலில் இன்று நடைபெற்றது.

இந்த மண்டல மாநாட்டில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி வரவேற்புரை ஆற்றிட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் தலைமை தாங்கினார். மாநாட்டில் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் மாவட்ட தலைவர் நடராஜன் மாநில செயலாளர் கனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் மாநிலத் தலைவர் ராமநிதி கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி நிறைவு உரையாற்றினார்.

இந்த மாநாட்டில் திருச்சி தஞ்சாவூர் திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் புதுக்கோட்டை கரூர் கள்ளக்குறிச்சி பெரம்பலூர் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப் பாளர்கள் தூய்மை பாரத இயக்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *