திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு மாநில பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் நிறுவனர் அந்தோணி முத்து சேவியர்,ஜோர்வத் தலைவர் சந்தணராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கண்ணன் தீர்மானங்கள் பற்றி விளக்கி பேசினார்,

இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து கூட்டுறவு துறை அமைச்சருக்கும் அரசு செயலாளருக்கும் பதிவாளர்களுக்கும் கோரிக்கைகள் அளித்து வந்துள்ளோம் பலமுறை பேச்சுவார்த்தைக்கு நேர ஒதுக்கி தரகேட்டுள்ளோம், அரசின் கவனத்தை ஈர்க்கஒவ்வொரு மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் மாதம் நடத்த உள்ளதாகவும் அதைப்போல் ஆகஸ்ட் மாதம் இறுதியில் மாநிலம் தழுவி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்