மணல் மற்றும் எம்.சாண்ட் லாரி உரிமையாளர் ஒருங்கிணைந்த நலச்சம்மேளனத்தின் மாநில ஆலோசனை கூட்டம் அதன் மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் இன்று திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பன்னீர் செல்வம் : தமிழ் நாட்டில் மணல் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் 26 மணல் குவாரிகள் இயங்குவதாக சொல்லுகிறார்கள். ஆனால் தமிழகம் முழுவதும் நான்கு, ஐந்து குவாரிகள் தான் இயங்குகிறது. அதனால் மணல் தட்டுப்பாடு ஏற்படுகின்றது, மணல் லாரி உரிமையாளர்களும் அதனை நம்பி இருக்கும் தொழிலாளர்களும் இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழ்நாட்டில் அதிக அளவு குவாரிகளைத் திறந்து அனைவருக்கும் மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணலுக்கு மாற்றாக இன்று எம்.சாண்ட் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எம்.சாண்ட்டை அதன் விற்பனையாளர்கள் சரியான முறையில் தயாரிப்பது இல்லை .விதிமுறைகளுக்கு மாறாக கலப்படமான பழுதடைந்த எம்.சாண்ட் மணலை தருகிறார்கள். இதனால் எம்.சாண்டை கொண்டு கட்டப்படும் கட்டிடங்கள் சிரத்தன்மை இல்லாமல் இருக்கிறது. காவல்துறையினும் வருவாய்த் துறையிலும் சோதனை என்ற பெயரில் எங்களிடம் அபரதம் விதிக்கிறார்கள் குவாரிகளை கண்டு கொள்வதில்லை. தமிழ்நாட்டில் 412 எம்.சாண்ட் குவாரிகளுக்கு மட்டும் அனுமதி உள்ளது. ஆனால் தற்போது தமிழகத்தில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட போலியான குவாரிகள் செயல்பட்டு வருகிறது

எம்.சாண்ட் காடுகளை, மலைகளை அழித்து தயாரிக்கிறார்கள். அதனால் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. மணல் இயற்கையான வளம், அதில் கட்டப்படும் கட்டிடங்கள் தான் உறுதியானதாக இருக்கும் எனவே தான் அதிக அளவு மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்கிறோம். சமூக ஆர்வலர்கள் சுய நலத்துக்காக ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என கூறுகிறார்கள். ஆற்றில் மணல் எடுப்பதால் எந்த வளமும் பாதிக்கப்படுவதில்லை, தண்ணீர் அதிக அளவு ஆற்றில் வரும் போது மீண்டும் மணல் வந்து சேரும். எனவே அனைவரும் இதனை புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால் மிக விரைவில் திருச்சி தலைமை பொறியாளர் பொதுப்பணி துறை அலுவலகத்தில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என கூறினார். இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அந்த சமையல் இனத்தின் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்