பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது முறையான நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்தும் , முன்னாள் முதல்வர் எம்,ஜி, ஆர்-ரை தரக்குறைவாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது

அதே போல திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக திமுக அரசை கண்டித்தும் , ஆ,ராசாவை கண்டித்தும் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கழக அமைப்பு செயலாளருமான ரத்தினவேல் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்

இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ஐயப்பன், திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன், மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், கவுன்சிலர் அரவிந்த், திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் வழக்கறிஞர் முத்துமாரி உள்ளிட்ட மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு திமுகவிற்கு எதிராகவும் , ஆ.ராசாவிற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *