ஸ்ரீரங்கம் மண்ணச்சநல்லூர் லால்குடி திருவரம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு திட்டமிட்டு ஏழை எளிய மக்களை வேதனைக்கு ஆளாக்க துடிக்கும் திமுக அரசை கண்டித்தும் இத்திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் வடக்கு திருச்சி புறநகர் தெற்கு திருச்சி மாநகர் ஆகிய மாவட்ட கழகங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி அல்லி துறை அண்ணா திடல் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி மற்றும் கழக அமைப்புச் செயலாளரும், புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கினார்.

திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் குமார் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி சிவபதி கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேலு முன்னாள் அரசு கொறடா மனோகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்