நாமக்கல்லில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சி.யை பற்றி இழிவாக பேசியதாக கூறி, வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் திமுக எம்.பி ஆ. ராசா மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ. உ.சி சிலை முன்பு நிறுவனத் தலைவர் ஹரிகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது

 இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது ஆ.ராசாவின் உருவப்படத்தை செருப்பால் அடித்து படத்தை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஆ ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் ஒரு சில வாலிபர்கள் அந்த வழியாக வந்த தனியார் மற்றும் அரசு பேருந்துகளை மறித்து அதன் மீது ஏறி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் திருச்சி நீதிமன்றம் அருகில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *