தி.மு.க ஐடி விங்க் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை கடந்த ஜூன் 17ஆம் தேதி அன்று அதிமுக பொதுச் செயலாளர் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் உருவத்தை கேலிச் சித்திரமாக சித்தரித்து அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டு அந்த பதிவில், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தனர். “வாயைத் திறந்து பேசுங்கள் பழனிசாமி!” என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

 இந்த பதிவு அ.தி.மு.கவினரை கொந்தளிக்க வைத்தது இந்நிலையில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவினர் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும் நாகரீகமற்ற முறையில் பதிவிட்டுள்ளனர். என கூறி திருச்சி அதிமுக மாநகர் மாவட்டம் சார்பாக திருச்சி மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேல் ஆகியோர் தலைமையில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புகார் மனு அளித்தனர்.

இந்நிகழ்வில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர், கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்லின், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் வரகனேரி சசிகுமார், வழக்கறிஞர் இணை செயலாளர்கள் முல்லை சுரேஷ், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு உள்ளிட்ட அதிமுகவினர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்