திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி உறையூர் பகுதி, தில்லை நகர் பகுதி, காஜாமலை பகுதி திமுக சார்பில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் உறையூர் பகுதி செயலாளர் இளங்கோ ஏற்பாட்டில் உறையூர் எஸ்.எம் பள்ளியிலும், தில்லை நகர் பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான நாகராஜ் ஏற்பாட்டில் சண்முகா நகர் பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளியிலும்,

மண்டல குழுத் தலைவர் துர்கா தேவி ஏற்பாட்டில் மார்சிங் பேட்டை அந்தோனியார் தேவாலயம் அருகிலும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச வேஷ்டி, சேலைகளை பொது மக்களுக்கு வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன் மற்றும் மண்டல குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்