திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர சிறுபான்மை நல உரிமைப்பிரிவு சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூய அந்திரேயா சி எஸ் ஐ ஆலயத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட சிறுபான்மை அணி தலைவர்.முகமது சலாம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் அருள் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். விழாவில் மாநகர சிறுபான்மை அணி அமைப்பாளர் இப்ராஹிம் மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், மாவட்டக் கழகச் செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

  

அதனைத் தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் புகழ் அஞ்சலியை புதுகை பூபாலனின் குழுவினரின் வழங்கினர். இந்த கிறிஸ்துமஸ் விழாவில் சிறுபான்மை நல உரிமைப்பிரிவு மாநில செயலாளர் டாக்டர்.சுபேர் கான், மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் மாவட்ட மாநகர நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன் கவிஞர் சல்மா செங்குட்டுவன் லீலாவேலு நூர்கான் சந்திரமோகன் செல்லையா சரோஜினி பகுதி கழகச் செயலாளர் மணிவேல் நீலமேகம் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்