திருவெறும்பூர் காட்டூர் பகுதி திமுக சார்பில் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆயத்த செயல்வீரரகள் கூட்டம் காட்டூர் பாப்பா குறிச்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜமாணிக்கம், மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார்.

 முன்னதாக கூட்டம் தொடங்குவதற்கு முன்பும் தொடங்கியும் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மின் வினியோகம் இல்லாததால் திமுகவினர் பெரும் அதிருப்தி அடைந்தனர். அமைச்சர் விழாவில் மின்சாரம் இல்லாமல் மின்சார வாரிய ஊழியர்கள் என்ன வேலை பார்க்கிறார்கள் என ஆக்ரோஷமான கட்சி நிர்வாகிகள்

இந்த நிலையில் அமைச்சரின் உதவியாளர் உடனடியாக சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரியை தொடர்பு கொண்டு தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு உதவி மின் பொறியாளர் சசிகுமார் விரைந்து வந்ததோடு உடனடியாக அந்த பகுதியில் மின் இணைப்பு கொடுத்தார். இருந்தும் சுமார் கூட்டம் தொடங்கி சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மின் இணைப்பு இல்லாமல் அமைச்சர் அவர்கள் காத்திருக்க நேரிட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்