மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட, மாநகர பொறியாளர் அணி சார்பில் பொறியியல் மாணவர்களுக்கான மாநிலம் தழுவிய மாபெரும் பேச்சுப்போட்டி மற்றும் கருத்தரங்கம் திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள எஸ்ஐடி வளாக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பொறியாளர் அணி தலைவர் தென்னரசு தலைமை தாங்கினார். மாநகர கழக செயலாளர் மதிவாணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்த கருத்தரங்கிற்கு கவிஞர் நந்தலாலா கலந்து கொண்டு நவீன தமிழ்நாட்டின் ஆர்க்கிடெக்ட் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில அணி செயலாளர்கள் K.N.சேகரன், வண்ணை அரங்கநாதன், சபியுல்லா மற்றும் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஜியாவுதீன் மாநகர பொறியாளர் அணி அமைப்பாளர் மெய்யப்பன் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் நடராஜன் சக்கரவர்த்தி மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாநகர பொறியாளர் அணி தலைவர் இன்பா நன்றியுரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்