அதிமுக கழக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் , சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தஞ்சை மற்றும் நாகப்பட்டினத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை 19ம் தேதி புதன்கிழமை காலை 6.00 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்து நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மீண்டும் மாலை 5.30 மணி அளவில் விமானம் மூலம் திருச்சியிலிருந்து சென்னை செல்ல இருக்கிறார்..

எனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்குமாறு திருச்சி மாவட்ட அதிமுக கழக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *