திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இதேபோன்று திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர சோதனை ஈடுபட்டனர். பின்னர் இது புரளி என்று தெரிய வந்தாலும். காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

 இந்நிலையில் இன்று திருச்சியில் உள்ள பிரீஸ் ஹோட்டல், கோர்ட் யார்ட், திலகவதி , கண்ணப்பா போன்றநட்சத்திர ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் 4 ஹோட்டல்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்