தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34 வது படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஷால், நடிகை பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி ஆகியோர் நடிக்கும் விஷால் 34 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட திரைபடத்தை டைரக்டர் ஹரி இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் முக்கிய காட்சிகள் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.. இந்த திரைப்படத்தின்‌ படப்பிடிப்பு திருச்சி – சிதம்பரம் சாலை,லால்குடி அருகே சிறுமருதூர் அருகில் உள்ள கிராமத்தில் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்த போது,

அந்த வழியாக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்றார். அவரது சொந்த ஊரான லால்குடி காணக்கிளியநல்லூருக்கு சென்று கொண்டிருந்த அமைச்சரை கண்டதும், படப்பிடிப்பு குழுவினர் அமைச்சருக்கு வணக்கம் தெரிவித்தனர். இதனை கண்ட அமைச்சர் கே.என்.நேரு தனது காரை நிறுத்தி படப்பிடிப்பு நடைபெறுவதை பார்வையிட்டு படக்குழுவினருடன் சந்தித்து உரையாடினார். அமைச்சர் கே.என்.நேரு வந்திருப்பதை அறிந்து அங்கு வந்த விஷால் அவரை வரவேற்றார். அவருடன் இயக்குனர் ஹரி, நடிகர் சமுத்திரகனியும் வரவேற்றனர். பின்னர் அமைச்சர் அவர்களுக்கு சால்வை அணிவித்து திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். மேலும் படப்பிடிப்பு குழுவினர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை கூறினார்.

இதனை தொடர்ந்து நடிகர் விஷால் உள்ளிட்டோர், அமைச்சர் நேருவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினர். பின்னர் எந்த உதவி என்றாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி விட்டு அமைச்சர் கே.என்.நேரு புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பின் போது திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வைரமணி, மேற்கு மாநகர செயலாளருமான மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்