திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை எதிரே ஸ்ரீ தாயார் ஹோம் கேர் சர்வீஸ் என்ற பெயரில், வீடுகளுக்கு நர்சுகள் அனுப்பி வைக்கும் நிறுவனம் மற்றும் ஆம்புலன்ஸ் நிறுவனம் நடத்தி வந்தவர் பிரபு என்கிற பிரபாகரன் வயது 45 இவர் பாமக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அணி முன்னால் செயலாளராக இருந்தவர் இவருக்கும் பாமக மத்திய மாவட்ட செயலாளர் உமாநாத் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கடையை காலி செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது இருதரப்பினரும் மோதிக் கொண்டனர்.

இதுகுறித்து இருதரப்பினரும் உறையூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் இந்நிலையில் இன்று இரவு பிரபு தனது நிறுவனத்தில் தனியாக அமர்ந்த இருந்த போது நான்கு பேர் கொண்ட கும்பல் அலுவலகத்தில் புகுந்து பிரபுவை சரமாரியாக வெட்டியது இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *