சிவகங்கை மாவட்டம், பாலையூா் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் இருந்த சதீஷுக்கு, சில தினங்களுக்கு முன் வாந்தி, பேதி ஏற்பட்டதையடுத்து. உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுதொடா்பாக, கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *