திருச்சி வயலூர் ரோடு அருகில் வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து ரவுடி ராஜா ( எ ) கார்த்திக் ராஜா வயது 29 த.பெ.சகாயராஜ் என்பவரை கைது செய்து , நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . மேலும் விசாரணையில் ரவுடி ராஜா ( எ ) கார்த்திக் ராஜா என்பவர் மீது கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக 6 வழக்குகளும் , இருசக்கர வாகனம் மற்றும் பூட்டிய வீட்டில் திருடியதாக 5 வழக்கும் , கொலை முயற்சி மற்றம் அடிதடியில் ஈடுபட்டதாக 2 வழக்குகளும் , இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாக 2 வழக்குகள் உட்பட மொத்தம் 19 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது .

எனவே , ரவுடி ராஜா ( எ ) கார்த்திக் ராஜா என்பவர் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்பவர் எனவும் , கத்தியை காண்பித்து பணத்தை பறித்து செல்பவர் எனவும் , பூட்டிய வீட்டில் திருடும் எண்ணம் உடையவர் என விசாரணையில் தெரியவருவதால் , மேற்கண்ட ரவுடி யின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு விபச்சார தடுப்புபிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து , திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ரவுடியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார் . அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள ரவுடி மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார் . மேலும் , திருச்சி மாநகரில் இதுபோன்ற இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்