மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு திருவுருவ சிலையை கடந்த மாதம் காணொளி காட்சி மூலம் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே திறந்து வைத்தார்.

இந்நிலையில் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பங்கேற்பதற்காக வந்தார். முன்னதாக டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் தமிழக நிர்வாக நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு உடன் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கொய்யா மொழி அமைச்சர் உதயநிதிக்கு தங்கம் மோதிரம் அணிவித்தார். இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா தனக்கோடி கோட்டத் தலைவர் மதிவாணன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *