திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட காட்டூர் மான்போர்ட் பள்ளி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் கல்லூரி மேலப்புதூர் பகுதியில் உள்ள சென்டன்ஸ் மேல்நிலைப்பள்ளி, மன்னார்புரம் அருகே உள்ள சமது ஹையர் செகண்டரி ஸ்கூல் மற்றும் கேம்பியன் பள்ளி உள்ளிட்ட 8 தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் இன்று காலை வந்தது.

இது குறித்து மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மின்னஞ்சலை போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டலில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்