திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள ரெட்டிமாங்குடி ஊராட்சியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நிறுவப்பட்டுள்ள, அதிமுக நிறுவனர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் முழு் உருவ சிலையை நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் யாரோ சேதப்படுத்தியுள்ளனர். இன்று காலை எம்.ஜி.ஆர் சிலையின் வலது கை உடைந்த நிலையில் இருப்பதை கண்டு பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையில் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அதிமுகவினர் சேதப்படுத்தப்பட்ட சிலை முன்பு ஒன்று திரண்டு சிலையை சேத்ப்படுத்திய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் போலீசார் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையில் சிலையை சேத்ப்படுத்திய மர்ம நபர்களை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அதிமுகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்