திருச்சி மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 23, 24, 25 ஆகிய தினங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பகுதியில் எழுச்சிப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு பொதுச் செயலாளர் பங்கேற்கும் இடங்களை அதிமுக கழக அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு மேற்கொண்டு கழக நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்..
இந்த நிகழ்ச்சியில் அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி முன்னாள் அமைச்சர் சிவபதி, கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி பகுதி கழக செயலாளர்கள் , உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.