தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் காவேரிக்கரையில் அமைந்த மாநகரமான திருச்சி மாநகரில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்” என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து திருச்சி மாநகரில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைய உள்ளது. திருச்சியில் மதுரை சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமையவுள்ளது. கலைஞர் பெயரால் திருச்சியில் அமையவிருக்கும் புதிய நூலகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

  உடன் அமைச்சர்கள் கே என் நேரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலெக்டர் பிரதீப் குமார் மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், பொது நூலக இயக்குநர் இளம்பகவத் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நூலகத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்