திருச்சி ஓயமேரி சுடுகாடு அருகே இன்று அதிகாலை கண்டெய்னர் லாரி ஒன்று தீ பிடித்து எரிவதாக திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்து குறித்து திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில்

அரியானா மாநிலத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு கோயம்புத்தூர் சென்று அங்கு சரக்குகளை இறக்கிவிட்டு பெரம்பலூர் எம்ஆர்எப் டயர் கம்பெனிக்கு செல்வதற்காக திருச்சி ஓயாமேரி சுடுகாடு வழியாக வந்தபோது திடீரென முன்பகுதியில் உள்ள இன்ஜினில் தீ பற்றி மளமளவென எரிந்துள்ளது. மேலும் கண்டனர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு எவ்வித காயங்கள் ஏற்படவில்லை மேலும் இது குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *