திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம் அருகே திருவள்ளுவர் தெரு உள்ளது. இங்கு, 50 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் இருந்தது. நேற்றிரவு பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக, இந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்தது.

மின்கம்பிகளை அறுத்துக் கொண்டு, வீடுகள் மீது விழுந்தது. இதனால், இப்பகுதியில், 12 மணி நேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். மாநகராட்சி பணியாளர்கள் இயந்திரங்கள் மூலம் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *