தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி தமிழக போக்குவரத்து துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் புதிய விரிவான மினி பஸ் திட்ட தொடக்க விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு 27 புதிய விரிவான வழித்தடங்களுக்கு செல்லும் மினி பஸ்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த மினி பஸ்கள் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து முத்தரசநல்லூர், கூடலூர், பழூர், புள்ளம்பாடி, திருப்பஞ்சலி, மண்ணச்சநல்லூர், மகிழம்பாடி மற்றும் துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.,

இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்,, மாநகராட்சி ஆணையர் சரவணன், கோட்டத் தலைவர் துர்கா தேவி, பகுதி செயலாளர் காஜாமலைவிஜி, திருச்சி மத்திய மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கலந்தர் பஷீர், அரசு அதிகாரிகள், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ெகலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்