உலகின் நம்பர் ஒன் நிறுவனமான டெய்கின் நிறுவனத்தின் 100 வது ஆண்டு முன்னிட்டு சிறப்பான முறையில் டெய்கின் அனைத்து புராடெக்டர்களுக்கும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி புத்தூர் அருணா நகர் பகுதியில் புதிய டெய்கின் சொல்யூஷன் பிளாசா யுனிவர்ஸ் ஏர் சொல்யூஷன் ஷோரூம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக டெய்கின் நிறுவனத்தின் தென் இந்திய மண்டல இயக்குனர் ராவோ கலந்துகொண்டு புதிய ஷோருமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அருகில் தமிழ்நாடு கிளைத் தலைவர் அசோக், முதன்மை மேலாளர் காளீஸ்வரன், மேலாளர் ஹரி பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். முன்னதாக இவ்விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்களை டெய்கின் யுனிவர்ஸ் ஏர் சல்யூஷன் ஷோரூமின் நிர்வாக இயக்குனர்கள் நந்தகுமார் மற்றும் அருண் ஆகியோர் பொன்னாடை போற்றி உற்சாகமாக வரவேற்றனர்.

மேலும் இந்த டெய்கின் யுனிவர்ஸ் ஏர் சொல்யூஷன் ஷோரூம் மூலம் வீடுகள் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வணிக வளாகங்கள் திருமண மண்டபங்கள் மருத்துவமனைகள் தியேட்டர்கள் ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட இடங்களில் தங்களின் சேவையை தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *