திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள குமுளூர் புள்ளம்பாடி சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை காரில் கடத்தி வருவதாக காணக்கிளியநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த காணக்கிளியநல்லூர் போலீசார் குமுளூர் புள்ளம்பாடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த; வழியாக வந்த டாட்டா சுமோ காரை மறித்து சோதனை செய்தனர்.

  சோதனையில் தடை செய்யப்பட்ட 24 கிலோ க குட்கா பொருட்கள்; இருப்பது தெரிய வந்தது. பின்னர் காரில் வந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் லால்குடி அருகே புதூர் உத்நமனூர் நடுத்தெருவை சேர்ந்த இளையராஜா, தச்சங்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முனிராஜ், புள்ளம்பாடி சிவன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் என்ற திக்குவாய் சுரேஷ் ஆகியோர் குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காணக்கிளியநல்லூர் போலீசார் 3 மேரையும் கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் குட்கா பொருட்களை கடத்தி் வந்த *டாடா சுமோ கார், ஒரு ஸ்கூட்டி வாகனம் மற்றும் பணம் ரூ. 22,690 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *