திருச்சி – சேலம் நெடுஞ்சாலையில் நொச்சியத்தை அடுத்த வாத்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிளியநல்லூர் பகுதியில் பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்ற ராமஜெயம் என்ற தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து அறிந்து வந்த வாத்தலை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பஸ்சில் சிக்கி தவித்த பயணிகளை மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *