திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை சார்பாக பொதுமக்களுக்கு சிறுநீரக தொற்று நோய்கள் குறித்த மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது ‌ இதில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 24 மணி நேர ரத்த சுத்திகரிப்பு பரிசோதனை செய்யப்படுகிறது இந்த மருத்துவ முகாம் கடந்த 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பாக உலக சிறுநீரக தினம் முன்னிட்டு சிறுநீரக செயல் இழப்பு சிறுநீரக தொற்று நோய்கள் அனைத்து சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ரத்தம் கலந்து போவது அவசரமாக சிறுநீர் கழிப்பதால் சிறுநீரக கல் தொந்தரவு,

சிறுநீரக புற்றுநோய் சிறுநீர் அடைப்புகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் இந்த முகாமில் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது . இந்த மருத்துவ முகாமில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் கணேஷ் அரவிந்த் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் பொதுமக்களுக்கு அறிவுரைகளும் மற்றும் சிகிச்சை முறையினை குறித்து எடுத்துரைத்தனர் மேலும் இந்த மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்