திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து கரியமாணிக்கம் அருகே எஸ்.புதூர் பகுதியில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி சுகந்தரம்.இவரது மனைவி ராணி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களின் மகள் லட்சுமி வயது (14) சமயபுரம் அருகே பள்ளிவிடையில் உள்ள அரசு பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமி லட்சுமி வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதற்காக நேற்று காலை புறப்பட்டு உள்ளார். அப்போது வீட்டில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. மேலும் ஜங்ஷன் பாக்ஸ் இருந்துள்ளது. அதன் அருகே அந்த மாணவி கொடிக் கயிரில் துணியை காய வைத்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார்.

இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் மாணவி லட்சுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளிக்கு புறப்பட்ட மாணவி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *