திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக வீரர்களுக்கும் கால்நடை மருத்துவர்கள் காளைகளுக்கும் உடல் பரிசோதனை செய்து களத்திற்கு அனுப்பினர். போட்டியினை லால்குடி ஆர்டிஓ தலைமையில் உறுதிமொழி ஏற்று தொடங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வாடிவாசலில் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்க்கப்பட்டன . காளைகள் அவிழ்க்க பட்டதும் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 450 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளும் 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். தேர்தல் நடத்தி விதிமுறைகள் தமிழில் இருப்பதால் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் வெற்றி பெற்ற காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி ரகுபதி ராஜா தலைமையில் 200 போலீசார் ஈடுபட்டிருந்தனர்

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்