திருச்சிராப்பள்ளி மாவட்ட அமெச்சூர் டேக்வாண்டோ அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் திருச்சி தேசிய கல்லூரி உள் விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கி இரண்டு தினங்கள் நடைபெற்று வருகிறது.

சப் ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் ஆடவர் மற்றும் மகளிர் என தனித்தனியே எடை பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது இரண்டு நிமிடங்களில் நடத்தப்படும் போட்டிகளில் தலை மற்றும் நெஞ்சு பகுதிகளில் கால்களால் தாக்க வேண்டும், அவ்வாறு தாக்கி அதிக புள்ளிகளை பெறும் வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

மாஸ்டர் கணேசன் தலைமையில் நடைபெறும் இப்போட்டியில் திருச்சி மாவட்டத்திலிருந்து பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் முதல் இரு இடங்களை பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

 மேலும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர் . ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள இந்த விளையாட்டில் சான்றிதழ் பெற்றவர்க்ளுக்கு அரசு வேலை, கல்லூரி சேர்க்கைக்கு இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை. முன் வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *