திருச்சி மாவட்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி புத்தூர் பெரியார் மணியம்மை மாளிகை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த டேக்வாண்டோ போட்டியில் திருச்சி மாவட்டத்திலிருந்து சப் ஜூனியர் ஜூனியர் சீனியர் சப்ஜீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. தனித்தனியாக, 69 பிரிவுகளில், ‘நாக் அவுட்’ போட்டிகள் நடைபெற்றன. அதில்,ஒவ்வொரு மாணவரும் தங்களின் திறமையை வெளிப்படுத்தி அசத்தி, வெற்றியை பெற வேண்டும் என முனைப்பில் விளையாடினர்.

மாணவர்கள் ஆக்ரோஷகமாக மோதிக்கொண்ட விதம் பார்வையாளர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவ, மாணவியர் எதிராளியை எதிர்கொண்ட போது, மாணவர்கள் கைதட்டி, ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். இந்த டேக்வாண்டோ போட்டியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் அடுத்து மாநில அளவில் நடைபெறும் டேக்வாண்டோ போட்டிகளில் பங்கு பெறுவதற்கு தகுதி பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்