தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய “தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” நூல் அறிமுக விழா திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் திருச்சி மாவட்ட வாசகர் வட்டம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் சார்பாக நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர்- சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், தேசிய நல்லாசிரியர்-கவிஞர் தங்கம் மூர்த்தி ஆகியோர் நூல் அறிமுக உரையாற்றி சிறப்பித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வாசகர் வட்டம் சார்பாக மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர் சரவணன், ஜமால் முகமது கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் காஜா நஜீமுதீன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ் வாசகர் வட்ட தலைவர் அல்லிராணி பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.