ஒருங்கிணைந்த குடி மற்றும் போதை மறுவாழ்வு மையம் மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி திருச்சி மேஜர் சரவணன் நினைவு தூபி அருக்கே இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி பாஸ்கரன் கலந்து கொண்டு கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

 இந்த விழிப்புணர்வு பேரணியானது மேஜர் சரவணன் நினைவு துபியில் தொடங்கி மத்திய பேருந்து நிலையம் வழியாக திருவள்ளுவர் சாலை பாரதிதாசன் சாலை வழியாக ரயில்வே ஜங்ஷனில் நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் போதை பொருள் ஒழிப்பு சம்பந்தமான பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு பள்ளி கல்லூரி, பயிற்சி மருத்துவர்கள், உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *