தமிழக நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று அந்தநல்லூர் ஒன்றியம் கம்பரசம்பேட்டையில் நடைபெற்று வரும் நீரேற்று நிலைய பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையத்தினை மற்றும் கம்பரசம்பேட்டையில் நடைபெற்று வரும் நீரேற்று நிலைய பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் , மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்