திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மனோகரன் இவர் ஏஐடியுசி ஆட்டோ ஓட்டுநர் சங்க உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் இன்று மதியம் திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே உள்ள கல்யாண சுந்தரபுரம் பகுதியில் சவாரி ஏற்றி கொண்டு வந்து பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் ஆட்டோவை எடுக்க சென்ற பொழுது சாலை ஓரத்தில் மணி பர்ஸ் ஒன்று கிடப்பதை கண்டார் உடனடியாக அந்த மணி பர்ஸை எடுத்து அங்கு இருந்தவர்களிடம் இது யாருடைய மணி பர்ஸ் என கேட்டார். யாருடையதும் இல்லை என தெரிந்ததும்,

மணி பர்ஸை திறந்து பார்த்தபோது அதன் உள்ளே பணம் மற்றும் ஆதார் கார்டு, பான் கார்டு, ஏடிஎம் கார்டு, ரேஷன் கார்டு, மற்றும் ஓட்டுநர் உரிமம் கார்டு இருப்பதைக் கண்டார் . மேலும் அந்த மணி பர்ஸில் உரிமையாளரின் செல் நம்பர் இருப்பதை கண்டார் உடனடியாக அவரை தொடர்பு கொண்ட போது அவர் கீழப்புதூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சிவகுமார் என்பது தெரிய வந்தது.

மேலும் சாலையில் கிடைத்த மணி பர்ஸ் குறித்த விவரங்களை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் பர்ஸ் தொலைத்தவரை நேரில் வரவழைத்து மணி பர்ஸை ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளரும், கவுன்சிலருமான சுரேஷ் அவர்கள் முன்னிலையில் ஒப்படைத்தார். மணி பர்ஸை பெற்றுக்கொண்ட அவர் ஆட்டோ ஓட்டுனர் மனோகரனுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார். மேலும் ஆட்டோ ஓட்டுநர் மனோகரனின் நேர்மை தவறாத செயலுக்கு அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *