பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை பஞ்சாப் போலீசார் மற்றும் மத்திய துணை ராணுவ படையினர் கைது செய்ததை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது விவசாயிகள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று மாலை திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு வீட்டில் போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருந்தனர். இந்நிலையில் திடீரென்று பஞ்சாப் முதல்வர் உருவப் படத்தை எரித்து விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து பஞ்சாப் மாநில முதல்வருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்:-