திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பட்டாகத்தியை கையில் வைத்துக்கொண்டு நாட்டு வெடியை வெடிக்கும் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. இந்த வீடியோ குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த இளைஞர் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை சேர்ந்த மன்னாரு என்கிற மணிகண்டன்(21) என்பதும்

 அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. போலீசார் அவரை தேடி வந்த நிலையில் பெட்டவாய்தலை அருகே மணிகண்டன் பட்டாக்கத்தி வைத்து கொண்டு பொதுமக்களை மிரட்டி வந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த பெட்டவாய்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *