திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு திருச்சி மாவட்டத்தில் ரூ. 5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய மருத்துவ கட்டடங்களை திறந்து வைத்தனர். தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் ர.1.48 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை 163 பயனாளிகளுக்கு இன்று வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாநகர மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, அரசு மருத்துவமனை கண்கானிப்பாளர் அருண்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்