திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.17.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமையவுள்ள தனியார் சொகுசு பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தமிழக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகராட்சி மேயர் அன்பழகன், நகரப்பொறியாளர் சிவபாதம், செயற் பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள், அரசு துறை உயர் அலுவலர்கள், மண்டலத். தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
