திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், அதவத்தூரில் செயல்படும் முத்துராஜா மான்ய நடுநிலைப்பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி ஃபோர்ட் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடங்களை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மண்டல குழு தலைவர் மதிவாணன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் அங்கத்தினர் மற்றும் மாணவ மாணவிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.