திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் துவங்கி சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடைபெற உள்ள இந்த பேரணி வழி நெடிகளும் விடுதலை சிறுத்தை கட்சியின் கொடியும், பிரம்மாண்ட பிளக்ஸ் போர்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைவர்கள் உரையாற்றும் பிரம்மாண்டமான மேடைகள் அமைக்கும் பணியும் தற்போது நடைபெற்று . கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தலைவர்கள் பேசுவதை காணும் வகையில் டிஜிட்டல் திரைகள் மற்றும் ஒலி ஒளி அமைப்புக்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்ணல் அம்பேத்கர், எழுச்சித் தலைவர் திருமாவளவன், காரல் மார்க்ஸ் ஆகியோரின் பிரமாண்டமான கட்டவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.