திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் பி கே அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி இவருடைய மனைவி கலையரசி. இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பி. கே. அகரத்தில் உள்ள சோள குட்டை வரத்து வாரியில் கடந்த 20 ந்தேதி வேலை செய்து கொண்டு இருக்கும் போது விஷப்பாம்பு கடித்தது.இதில் கலையரசி மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு பொறுப்பாளர்கள் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த 108ஆம்புலன்ஸில் கலையரசியை ஏற்றி திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்