தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 16 – வது நாளான இன்று ஒப்பாரி வைத்து நூதண முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 மேலும் 2016 – ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகு , பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக  கையெழுத்தை  போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது, ஆகையால்  விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். அதேபோல் ஆலடியாறு டேமில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு பேசியது..  தொடர்ந்து 16-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். மேலும் மத்திய அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார், விவசாயிகள் வாழ்வாதத்திற்காக எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. விவசாயிகளின் விளைச்சலுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்