தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 17வது நாளாக வாயில் நிப்பில் வைத்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாய விலை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுக்காமல்.விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. ஒரு கிலோ நெல்லுக்கு 54ரூபாயும் ஒரு டன் கரும்புக்கு 8,100 ரூபாய் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர் காத்திருப்புபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று 17வது நாளாக இன்று வாயில் நிப்பில் வைத்து அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில்;- தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது தற்பொழுது சற்று விலை குறைந்துள்ளது. தக்காளியின் விலை கடுமையாக குறையாமல் இருக்கவும் திடீரென உயராமல் இருக்கவும் கோல்ட் ஸ்டோரேஜ் என்ற திட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும். இதன் மூலமாக தக்காளியின் விலை உயராமலும் விவசாயிகள் பாதிக்கப்படாமலும் இருப்பார்கள். இதுபோல திட்டத்தை கொண்டு வரவில்லை என்றால் மீண்டும் தக்காளியின் விலை உயர்ந்து பொதுமக்கள் அவதி அடைவார்கள். மேலும் தக்காளியினை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருப்பார்கள் என கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்